×

‘நான் அவன் தான்’ படத்தின் ஹீரோ செயின் பறிப்பில் ஈடுபட்ட நடிகர் குடும்பத்துடன் கைது

கோவில்பட்டி: செயின் பறிப்பில் ஈடுபட்ட நடிகர் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பங்களா தெருவைச் சேர்ந்த பழனிச்சாமி மனைவி முத்துமாரி (57) மற்றும் கதிரேசன் கோயில் ரோடு, கோபால்சாமி மனைவி வெள்ளத்தாய் (44) என்பவர்களிடம் பைக்கில் வந்த ஆசாமிகள் 25 சவரன் செயினை பறிந்த்து சென்றனர். புகாரின்பேரில், இரு சம்பவங்கள் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், திண்டுக்கல் செம்பட்டியை சேர்ந்த ஜனபுல்லா (42), அவரது மனைவி ரஸிகா (38), மகன் ஜாபர் (19) ஆகியோர் என தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், ஜனபுல்லா, ‘நான் அவன் தான்’ என்ற படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்துள்ளார். ஆனால் அந்தப் படம் வெளி வரவில்லை. இதனால் ஜனபுல்லாவுக்கு கடன் ஏற்பட்டது. இதனை அடைப்பதற்கு குடும்பத்தோடு கொள்ளையடிக்க முடிவு செய்து, பைக்கில் வெளியூர்களுக்கு கணவன், மனைவி, மகன் ஆகியோர் சென்று கொள்ளையடித்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

The post ‘நான் அவன் தான்’ படத்தின் ஹீரோ செயின் பறிப்பில் ஈடுபட்ட நடிகர் குடும்பத்துடன் கைது appeared first on Dinakaran.

Tags : Kovilpatti ,Palanichami ,Kovilpatti Bungalow Street, Thoothukudi district ,Dinakaran ,
× RELATED ஒரு கதை சொல்லட்டுமா சார்; சவுக்கு...